01.ஈமானின் கிளைகள்: அறிமுகம்
Échec de l'ajout au panier.
Échec de l'ajout à la liste d'envies.
Échec de la suppression de la liste d’envies.
Échec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
-
Narrateur(s):
-
Auteur(s):
À propos de cet audio
ஈமானின் கிளைகள்: ஓர் அறிமுகம்
இந்தச் சிறப்புத் தொடரின் துவக்க உரையில், ‘ஈமானின் கிளைகள்’ (ஷுஅபுல் ஈமான்) என்ற தலைப்பின் முக்கியத்துவம் விளக்கப்படுகிறது. 'ஈமான்' என்பது உள்ளத்தால் நம்புவது; 'இஸ்லாம்' என்பது உறுப்புகளால் செயல்படுவது. இவ்விரண்டிற்கும் இடையிலான மொழி மற்றும் மார்க்க ரீதியான நுட்பமான வேறுபாடுகளை இந்த உரை அலசுகிறது.
ஈமான் என்பது ஆணிவேர் போன்றது; தொழுகை, நோன்பு உள்ளிட்ட அமல்கள் அதன் கிளைகள் என்பதை இது தெளிவுபடுத்துகிறது.
"ஈமான் எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டது; அதில் உயர்ந்தது லாயிலாஹ இல்லல்லாஹ், தாழ்ந்தது பாதையில் கிடக்கும் நோவினை தரும் பொருட்களை அகற்றுவது; வெட்கம் ஈமானின் ஒரு பகுதி" என்ற நபிமொழியின் விரிவான விளக்கத்தையும் இதில் காணலாம்.
இன்ஷா அல்லாஹ், இனிவரும் தொடர்களில் மலக்குகள், வேதங்கள், தூதர்கள் உள்ளிட்ட ஈமானின் அடிப்படைத் தூண்கள் குறித்து குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஒளியில் விரிவாக அறிவோம்.